ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். அப்துல் நசீர் ஓய்வுபெற்ற 40 நாட்களுக்குள் ஒன்றிய பாஜக அரசால் ஆந்திரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டாது. நாடு முழுவதும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கடந்த ஜனவரி 4-ஆம் தேதி ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர், பாபர் மசூதி வழக்கு, பணமதிப்பு நீக்க வழக்கு ஆகியவற்றில் மோடி அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கிய அமர்வுகளில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.